search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு யாகம்"

    • உலக நன்மைக்காக நடந்தது
    • தினமும் யாக பூஜைகள் நடக்கிறது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை காஞ்சிபுரம் சாலையில் உள்ள காக ஆசிரமத்தில் உலக நன்மைக்காக உத்தம வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. உலக நன்மைக்கான உத்தம வழிபாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் கொல்லிமலை சித்தர் ஸ்ரீ தருமலிங்க சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.

    உத்தம வழிபாட்டு நிகழ்ச்சி நேற்று காலை சிறப்பு யாக பூஜையுடன் தொடங்கியது. யாக பூஜையை தொடர்ந்து அன்ன தானமும், புடவை தானமும் வழங்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து 2-வது நாளான இன்று காலை யாக பூஜையுடன் அன்ன தானமும் வழங்க ப்பட்டது. செப்டம்பர் 6-ந் தேதி காலை 9 மணிக்கு மகா பைரவ யாகம், 7-ந் தேதி சித்தர் வேள்வி பூஜையுடன் சாதுக்களுக்கு ஆடை தானமும் வழங்கப்படும். 8-ந் தேதி சிறப்பு யாக பூஜையுடன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    உலக நன்மைக்காக நடைபெறும் உத்தம வழிபாட்டு நிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பைரவர் அருள் பெறுமாறு காக ஆசிரம நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.
    • 24 வது பட்டம் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டு பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினார்.

    உடுமலை :

    உடுமலை தளி ரோடு பள்ளபாளையம் அருகே செங்குளம் கரையில் உடுமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு, நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் நடந்த இந்த பூஜையில் 24 வது பட்டம் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் சுவாமிகள்கலந்துகொண்டு பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினார். இந்த சிறப்பு யாகம் மற்றும் பூஜையில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை உடுமலை பாலாஜி சாரிட்டபிள் ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • பிரதமருக்கு நீண்ட ஆயுள் வேண்டி சிறப்பு பூஜை, யாகம் நடைபெற்றது.
    • கவுதமானந்த புரி சம்பத் சுவாமி யாகத்தினை நடத்தினார்.

    தென்திருப்பேரை:

    பிரதமர் மோடிபிறந்த நாள் வருகிற 17-ந் தேதி கொண்டாட படுவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், சேதுக்குவாய்த்தான் பகவதி அம்மன் கோவிலில் பாரதீய ஜனதா கட்சி வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர், கல்வியாளர் அரியமுத்து குணசேகர் தலைமையில் பிரதமருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், 2024-ல் பா.ஜனதா ஆட்சி அமையவும், மக்கள் நலம் பெற வேண்டியும் இன்று சிறப்பு பூஜை, யாகம் நடைபெற்றது.

    யாகத்தினை கவுதமானந்த புரி சம்பத் சுவாமி நடத்தினார்.இதில் தொழிலதிபர், அரசு ஒப்பந்ததாரர் ஸ்டாலின், கூட்டுறவு பிரிவு மாநில துணைத் தலைவர் அருமைதுரை, மாநில விவசாய அணி திட்ட பொறுப்பாளர் தமிழ் செல்வி, கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் மாரி துரைசாமி, தென்திருப்பரை ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் குமார் என்ற பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய தலைவர்கள் ஜெயசிங், காமினி, கார்த்திக், ஒன்றிய துணைத் தலைவர் லிங்க சடச்சி, கோமதிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாஜக நிர்வாகி கோமதிராஜ் செய்திருந்தார்.

    • சிறப்பு மூலிகைகள், வாசனை திரவியங்கள் யாக குண்டத்தில் போடப்பட்டது.
    • சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    திருவண்ணாமலை:

    உலக நன்மைக்காகவும், உலகத்தில் இருந்து கொரோனாவை முற்றிலும் விரட்டவும், நாடு முழுவதும் நல்ல மழை பொழிய வேண்டிய சித்தர்கள் அருள் வேண்டி சித்தர்கள் வாழும் ஆன்மீக நகரமான திருவண்ணாமலை நகரை ஒட்டி அமைந்துள்ள தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ள சுயம்பு சுப்பிரமணியசாமி கோவிலில் ஜப்பான் பக்தர்கள் சிறப்பு யாகம் செய்தனர்.

    இதில் பல்வேறு வகையான சிறப்பு மூலிகைகள் வாசனை திரவியங்கள் யாக குண்டத்தில் போடப்பட்டது.

    இந்த யாகத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சாக்கிகோ ஓஷி, சாயாஓஷி, மாஸ்கோஓஷி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    இந்த யாகத்திற்கான சிறப்பு ஏற்பாடுகளை மரக்காணத்தை பூர்வீகமாக கொண்ட ஜப்பான் குடியுரிமை பெற்ற சுப்ரமணியம் செய்திருந்தார்.

    இந்த யாகத்தில் தேவனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதில் கோவில் குருக்கள் சந்தோஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகம் நடத்தினார்கள்.

    இதனைத் தொடர்ந்து கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×